Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழிலிருந்து தீவுப்பகுதிகளுக்கு செல்லும் சகல அரச பேருந்துகளும் இடைநிறுத்தம்

யாழ்.பேருந்து நிலையத்திலிரு ந்து தீவுப்பகுதிகளிற்கு செல்லும் சகல அரச பேருந்துக்களும் நேற்று காலை 11 மணியிலிருந்து தற்காலி மாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பேருந்து நிலைய முகாமை யாளர் யோகநாதன் அறிவித்துள்ளார்.

குடாநாட்டிலிருந்து தீவுப் பகுதிக்கு செல்லும் பண்ணைப் பாலத் தில் ஏற்பட்ட சீரற்ற நிலையே இதற்குக் காரணம் என அவர் தெரிவித் துள்ளார்.தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பாலத்தை மேவிப்பாயும் வெள்ளத்தால் அதனூடாக செல்லும் வாகனங்களு க்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கருதியே போக்குவரத்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரி விக்கையில்த இது தொடர்பாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் தொடர்பு கொண்ட போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும் அத்துடன் இதற்கான மாற்றுப்பாதை தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஆலோசனைகளும் அதிகாரமும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை தீவுப்பகு தியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற அனைத்து அரச பேருந்துகளும் தீவுப் பகுதிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே மக்கள் இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயற்படும் படி யும் மக்களின் சொத்துக் களையும் உடைமைக ளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இதற்கமைய போக்குவரத்தை இயன்றளவு மேற்கொள்ள தற்காலிக பாதைகள் அமைக்க துரித கதியில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com