Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » நெடுந்தீவில் தீப்பற்றி எரிந்த மீன்வாடி

நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரத்தை சேர்ந்த மு.ஜெயராசா என்பவரது மீன்வாடி தீப்பற்றிக் கொண்டதில் ருபா 4லட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச்வம்பவம் பற்றி தெரியவருவதாவது:

சம்பவம் இடம்பெற்ற சமயம் வாடியில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்துள்ளர். தீடீர்எனத் திப்பற்றியதால் அதிர்ச்சியில் எழுந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போதும் அது சாத்தியப்படவில்லை.

வாடிக்குள் இருந்த வலைகள், மிதவைகள் உட்பட ருபா 4லட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பா செய்துள்ளதாகவும், இனம் தெரியாத நபர்களால் வாடி எரியூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com