Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » இராமர் இலங்கைக்குப் பாலம் போட்டது போல் பண்ணை வீதி புனரமைப்பு! (படங்கள் இணைப்பு)

கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த மழை மற்றும் காற்றினால் பலத்த சேதமடைந்த தீவகத்தின் பிரதான வீதியான பண்ணை வீதியைத் தற்போது முருகக் கல் கொண்டு செப்பணிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதாவது இராமர் இலங்காபுரிக்குப் பாலம் போட்டது போல் இவர்களும் முருகக் கல் கொண்டு இவ் வீதியினை செப்பணிடுகின்றனர்.

மேற்படி வீதியினைச் செப்பணிட்டுக் கொண்டிருக்கும் பணியாளர்கள் கற்கலை வரிசையாக எடுத்துச் சென்று கடல் அரிப்பைத் தடுப்பதற்கு கரையில் அடுக்குவதைப் பார்த்தால் இராமருக்காக வானரங்கள் இலங்கைக்குப் பாலம் போட கற்கள் கொண்டு சென்றபோல் தோன்றுகின்றது.

இதேவேளை இவ் வீதியினால் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இ.போ.ச. பஸ்களின் சேவைகள் வழமைக்குத் திரும்பியிருந்தாலும் வீதியின் நிலைமை முன்னரை விட தற்போது பல மடங்கு மேலும் மோசமடைந்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com