யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் 4 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டு தலைமறைவானதாகத் தெரிவிக்கப்படும் நபரை யாழ். பொலிஸார் தேடி வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை இச்சிறுமியின் தாயார் கடைக்குச் சென்றிருந்தபோது வீதியால் சென்ற ஒருவர் இச்சிறுமியின் வீட்டினுள் புகுந்து அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டுச் தப்பிச்சென்றுள்ளதாகவும்; தாயார் வீடு திரும்பியபோது இச்சிறுமி சட்டையில் இரத்தம் தோய்ந்தவாறு நின்றதாகவும் இதனைத் தொடர்ந்து தனக்கு நடந்ததை இச்சிறுமி தாயாரிடம் கூறியதும் தாயார் இச்சிறுமியை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.