2012ஆம் ஆண்டு இறுதிக்குள் யாழ். மாவட்டம் முழுவதும் லக்சபான மின்சாரம் விநியோகம் இடம்பெறும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய மின் பொறியியலாளர் ஞான கணேசன் தெரிவித்தார்.
இதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, மின் விநியோகம் அடிக்கடி தடைப்படுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
லக்சபான மின் விநியோகத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3559 மில்லியன் செலவில் சுன்னாகத்தில் உப மின் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இந்த வேலைத்திட்டங்கள் யாவும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் அளவில் நிறைவு பெறும். இதனால், யாழ் குடா நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வநியோகம் நடைபெறும் என” அவர் மேலும் குறிப்பிட்டார்