Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ். பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வேம்படியில் மாபெரும் நடமாடும் சேவை

யாழ். பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பெறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ் வழங்குதல் மற்றும் வைத்திய சேவைகளான பல் மருத்துவம், இரத்ததானம், கண் பரிசோதித்து கண்ணாடி வழங்குதல் போன்றனவும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நடமாடும் சேவையில் பங்குபற்றி பயனடையுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com