வட்டுக்கோட்டை கல்லூரி வீதியில் உள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்து பால் வடிகின்றது. இவ் அதிசயத்தை பெருமளவா னோர் பார்த்து வருகின்றனர். வட்டுக்கோட்டை கல்லூரி வீதி யிலுள்ள சின்னத்துரை நந்தகுமார் என்பவரது வீட்டு வளவில் பெரிய வேப்பமரம் ஒன்று உள்ளது.
அதிலிருந்து கடந்த வியாழக்கிழமை திடீரென பால் வடியத் தொடங்கியது. முதலில் சிறிதளவாக வடியத் தொடங்கிய பால் பின்னர் வேகமாக வரத் தொடங்கியது.
இவ் அதிசயநிகழ்வை பெருமள வானோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இவ் அதிசய நிகழ்வு இரண்டு நாட்களாகத் தொடர்ந்து இடம்பெற்றதாக கூறப்பட்டது.