விவசாயத் திணைக்களம் (விரிவாக்கம்), விவசாயத் திணைக்களம் (ஆராய்ச்சி), யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை, பனைவள அபிவிருத்திச் சபை, ஆகியன இணைந்து நடாத்தும் விவசாய விலங்கு வேளாண்மைக் கண்காட்சி.
தெனிப்பொருள்: சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சூழல் பாதுகாப்புடனான விவசாய உற்பத்தி.
காலம்: 18-09-2010 – 20-092010
நேரம்: காலை 8.30மணி – மாலை 5.30 மணி வரை
இடம்: திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், விவசாய ஆராய்சி நிலையம், கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்கள விவசாயிகள் கூடம், வானிலை அவதான நிலையம் ஆகியன இணைந்த வளாகம்.
விவசாயிகள், அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகம், சமூக மட்ட அமைப்புக்கள், ஆர்வலர்கள் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
விவசாயத் திணைக்களம் (விரிவாக்கம்), யாழ்.மாவட்டம்.