Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வளலா மற்றும் இடைக்காடு பிரதேசங்களிலுள்ள மக்களை மீளக்குடியமர்த்த அனுமதி

யாழ். மாவட்டத்திலுள்ள வளலா மற்றும் இடைக்காடு ஆகிய பிரதேசங்களிலுள்ள 389 குடும்பங்களை சேர்ந்த 1,320 பேரை அடுத்த இரு வாரங்களில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு படைகளின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மஹிந்த கத்துருசிங்கவுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உயர் மட்ட சந்திப்பின் போதே இந்த அனுமதி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, உயர் பாதுகாப்பு பகுதியான மயிலிட்டி பிரதேசத்தில் மீனவர்கள் கடற் றொழிலில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இமல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com