வீதி விஸ்தரிப்புப் பணிகளுக்காக வல்லைச் சந்தியில் இருந்து மண்டான் சந்திவரை நாளை முதல் யாழ் – பரித்தித்துறை வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.
வாகனச் சாரதிகளும் பொது மக்களும் மறு அறிவித்தல் வரை மாற்றுப்பாதையாக வல்லை – உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வீதியையும், தொண்டமனாறு – வல்லை துன்னாலை வீதியை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வீ.சுதாகர் கேட்டுக்கொண்டார்.