Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » வலி.வடக்கில் மீள்குடியமர்வு – நாளை நடத்த ஏற்பாடு

தெல்லிப்பழை பிரதேச பிரிவுக் குட்பட்ட இளவாலை வடக்கு ஜே/221, இளவாலை வட மேற்கு ஜே/222, வித் தகபுரம் ஜே/223 ஆகிய கிராம சேவை யாளர் பிரிவுகளுக்கான மீளக்குடிய மர்வு ஆரம்ப நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமை ச்சர் பசில் ராஜபக்­ தலைமையில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவா னந்தாவின் ஏற்பாட்டில் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பகுதியில் மீள் குடியமர்வு ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

தெல்லிப்பழை பிரதேச செயல கத்தில் இதுவரை மேற்படி பகுதி களுக்கு மீள்குடியமர்வதற்கு பதிவு செய்த குடும்பங்கள் அன்றைய தினம் காலை 6 மணிக்கு தெல்லிப் பழை பிரதேச செயலகத்திற்கு சமுக மளிக்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com