வடமாகாணத்திலுள்ள கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் பாவனை, சிறுவர் உரிமை மீறல் இடம் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடி விசாரணை மேற்கொள் ளப்பட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற வடமாகாண கல்வி அபி விருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போதே இவ்வாறான தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
வடமாகாணத்திலுள்ள பாடாசலைகள், தனியார் கல்வி நிலையங்களில் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் உரிமை மீறல், பால் நிலை சமத்துவமின்மை போதைப் பொருள் பாவனை இடம்பெறுவதாக உறுதிப்படுத்துமிடத்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும். அத்துடன் ஆக்கபூர்வமான நடவடிக்களும் மேற்கொள்ளப்படும்.
வடமாகாண கல்வி அபிவிருத்திக் குழுவால் இவை இனங்காணப்பட்டு உறுதிப்படுத் தப்படுமிடத்து உடனடி விசாரணை மேற் கொள்ளப்படும்.
எனவே பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் இவ்வாறான செயல்கள் இடம் பெறுமிடத்து வடமாகாணக் கல்வி அபிவிருத்திக் குழுவுக்குத் தகவல் வழங்க முடியும் என்று இந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டது.