வடமராட்சி சிற்றூர்த்திச் சங்கத்தின் கீழ் உள்ள மினிபஸ்களில் பயணம் செய்வோருக்கு பயணச்சீட்டு வழங்குமாறு அனைத்து மினிபஸ் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடமராட்சி தனியார் சிற்றூர்த்திச் சேவைச் சங்கத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவித்தவை வருமாறு:
எமது சங்கத்தில் பதிவு செய்து சேவையில் ஈடுபடும் மினிபஸ்கள் பயணிகளுக்குக் கட்டாயம் பயணச்சீட்டு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
இலக்கங்கள் பதியப்பட்ட பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் எமது சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. சேவையில் ஈடுபடமுன் நேரக் கணிப்பாளர்களிடம் பற்றுச்சீட்டு இலக்கங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அத்துடன் எமது சாரதிகள், நடத்துநர்களுக்கு உரிய சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இவை அடுத்த மாத முற்பகுதியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தனர்.
– உதயன்