Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு புதிய முகாமையாளர்

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய பிரதம முகாமையாளராக கந்த சாமி கேதீசன் நேற்று பொறுப் பேற்றுள் ளார். பிரதம முகாமையாளராகவிருந்த க.கணேச பிள்ளை பதவியிலிருந்து ஓய்வு பெற்றதை யடுத்து அவரது இடத்துக்கு கேதீசன் நியமிக் கப்பட்டுள்ளார்.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கைப் போக்குவரத்து சபையில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதம பிராந்திய முகாமையாளராக பதவி யேற்ற பின் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர் தன்னை இந்த பதவி க்கு தெரிவு செய்தவர்களுக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் இலங்கைப் போக்குவரத்து சபையின் வளர்ச்சிக்காக தாம் பாடுபட போவதாக வும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு வட பிராந்தியத்திலுள்ள யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை, மன்னார், வவுனியா ஆகிய பிராந்தியங்களில் உள்ள இலங்கைப் போக்குவரத்து சபைகள் இணை ந்து லீசிங் முறையில் தலா இரண்டு பேருந்து களை கொள்வனவு செய்யவுள்ளோம். இதன் மூலம் வருமானத்தை பெருமளவில் அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com