16 வயது யுவதி ஒருவருக்கு காதல் எஸ்.எம்.எஸ் அனுப்பியதால் 20 வயது இளைஞர் ஒருவர் அந்த யுவதியின் சகோதரரினால் துரத்தித் துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் ஒன்று வடமராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சிப் பிரதேசத்தின் புலோலி மேற்குப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் யுவதிக்கு காதல் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளதை அறிந்த யுவதியின் சகோதரர்கள் குறித்த கைத்தொலைபேசி இலக்கத்திற்குரிய இளைஞரை பிடித்து வாளினால் வெட்ட முற்பட்டபோது அவ்விளைஞர் அவர்களிடமிருந்து தப்பியோடியுள்ளார்.
ஆயினும் அவர்கள் குறித்த இளைஞரை மடக்கிப்பிடித்து அவரைத் தாக்கியுள்ளனர். அப்போதும் அவர் தப்பியோட முயற்சித்த வேளை அவரைக்கலைத்து கலைத்து வாளினால் வெட்டியுள்ளனர்.
இதன்போது கையில் காயமடைந்த குறித்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவரும் அதே இடத்தைச் சேர்ந்தவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.