Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ் முஸ்லிம் மக்களின் உண்ணாவிரதம் முடிபு

யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றப்பட் டுள்ள முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள் ளப்படவில்லை எனத் தெரிவித்து, மீள் குடி யேறிய முஸ்லிம்கள் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் மேற்கொண்ட சாகும்வரை யான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முடிபுக்கு வந்தது.

யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் திருமதி சுகுண ரதி தெய்வேந்திரம், உண்ணா விரதம் இடம்பெற்ற பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழங்கிய உறுதிமொழியை அடுத்தே குறித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற் றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு வழங் கப்பட்ட உணவு விநியோக முத்திரை நிறுத்தப்பட்டமை, கொடுப்பனவு கள் வழங்கப்படாமை, அரச மற் றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரில் வந்து பார்வையிடாமை மற்றும் யாழ். பொம்மைவெளி பிர தேசத்தில் அமைந்துள்ள மதுபான சாலை மூட வேண்டும் போன்ற பல கோரிக்கைளை முன்வைத்து உண் ணாவிரதத்தை மேற்கொண்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சுழற்சி முறையில் உண்ணாவிர தத்தில் ஈடுபட்ட மேற்படி மக்களை அரச உயர் அதிகாரிகள் யாரும் பார் வையிடாமையால் நேற்று முன் தினம் வியாழக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட் டத்தை ஆரம்பித்தனர். கடந்த வருட நடுப்பகுதி முதல் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் மீளக் குடியேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com