Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ்.மாவட்ட வாக்காளரின் எண்ணிக்கை மேலும் 24 ஆயிரம் பேரால் குறைவடையும்

யாழ். மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 24 ஆயிரத்து 716 பேரினால் மேலும் குறை வடையவுள்ளது.தற்போது முதற்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பெயர்ப் பட்டியலின் பிரகாரம் 16 ஆயிரத்து 999 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் 41ஆயிரத்து 715 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் கடந்த ஜூன் மாதத்திலிருந்து மேற்கொள்ளப் பட்டு வந்தது. இதனடிப்படையில் “பிசி’ படிவங்கள் விநியோகிக்கப்பட்டு அதனூடாகப் பெறப்பட்ட பதிவின் அடிப்படையில் வெளியிடப்பட்ட பெயர்ப்பட்டி யலிலேயே 24 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 2 அயிரத்து 312 பேர் நீக்கப்பட்டுள்ளதுடன் 752 பேர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் ஆயிரத்து 854 பேர் நீக்கப்பட்டுள்ள அதேசமயம் ஆயிரத்து 205 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 8 ஆயிரத்து 960 பேர் நீக்கப்பட்டும் ஆயிரத்து 508 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டும் உள்ளனர்.மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 2 ஆயிரத்து 973 பேர் நீக்கம். ஆயிரத்து 533 பேர் புதிதாகச் சேர்ப்பு. கோப்பாய் தேர்தல் தொகுதியில் 3 ஆயிரத்து 687 பேர் நீக்கம். ஆயிரத்து 929 பேர் புதிதாகச் சேர்ப்பு உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் ஆயிரத்து 972 பேர் நீக்கம். ஆயிரத்து 206 பேர் புதிதாகச் சேர்ப்பு. பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 2 ஆயிரத்து 722 பேர் நீக்கம். ஆயிரத்து 129 பேர் புதிதாகச் சேர்ப்பு. சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 2 ஆயிரத்து 227 பேர் நீக்கம். ஆயிரத்து 389 பேர் புதிதாகச் சேர்ப்பு.

நல்லூர் தேர்தல் தொகுதியில் 4 ஆயிரத்து 381 பேர் நீக்கப்பட்டு 2 ஆயிரத்து 242 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர தேர்தல் தொகுதியில் 5 ஆயிரத்து 412 பேர் நீக்கப்பட்டு ஆயிரத்து 774 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 5ஆயிரத்து 15 பேர் நீக்கப்பட்டு 2 ஆயிரத்து 332 பேர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் 2010ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் 4 இலட்சத்து 84 ஆயிரத்து 791 பேராகக் காணப்பட்ட எண்ணிக்கை தற்போது 4 இலட்சத்து 60 ஆயிரத்து 75 பேராகக் குறைந்துள்ளது.இதில் தேர்தல் ஆணையாளரால் வடக்கு , கிழக்குக்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட படிவத்தில் ஊடாக விண்ணப்பத்தவர்களதோ, உரிமை கோரி படிவத்தினூடாக விண்ணப்பித்த பதிவுகளோ உள்ளடக்கப்படவில்லை. அவை அனைத்தும் இறுதி வாக்காளர் பெயர்ப் பட்டயலிலேயே வெளியிடப்படும்.

இன்று முதல் காட்சிப்படுத்தப்படும் இந்த எ , பி பட்டியலில் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் சமர்ப்பிக்கமுடியும். அத்துடன் எதிர்வரும் நவம்பர் 31ஆம் திகதி வரை வாக்காளர்களைப் பதிவதற்குரியவர்கள் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com