தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான யாழ். மாவட்ட வெட்டுப்புள்ளி 142 என பரீட் சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின்படி அடுத்த ஆண்டுக்கான தரம் 6 அனுமதியை பிரபல பாடசாலைகளில் மாணவர்கள் பெறு கின்றமைக்கு வழிகாட்டியாக மாவட்ட அடிப்ப டையிலான வெட்டுப்புள்ளிகளையும் பரீட்சை திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான அவ் வெட்டுப்புள்ளிகள் வருமாறு,கொழும்பு – 145, கம்பஹா – 145, களுத்துறை – 145, கண்டி – 145, மாத்தளை – 145, நுவரே லியா – 140, காலி – 145, மாத் தறை – 145, அம்பாந்தோட்டை – 137, யாழ்ப்பாணம் – 142, கிளிநொச்சி – 139, மன்னார் – 141, வவுனியா – 143, முல்லைத் தீவு – 139, மட்டக்களப்பு – 142, அம்பாறை – 143, திருகோண மலை – 142, குருநாகல் – 145, புத்தளம் – 141, அநுராதபுரம் -140, பொலனறுவை-138, பது ளை- 141, மொனராகலை – 143, இரத்தினபுரி – 140, கேகாலை – 145.