நல்லூர் ஆலய பெருந்திருவிழாவை சிறப்பாக மேற்கொள்வதற்கு உதவிய சகலருக்கும் யாழ் மாநகரசபை மேயர் திருமதி யோ.பற்குணராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
யுத்த சூழல் அற்ற நிலையில் சமாதானம் நிலவுகின்ற இந்த சூழலில் நடைபெற்ற நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் பக்தி பூர்வமான நிலையில் தமிழர்களில் கலை கலாச்சார விழுமியங்களை எடுத்துக்காட்டும் வகையில் நடந்தேகுவதற்கு உதவிய சகலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் யாழ் மாநகரசபை மேயர். இவ்விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பு நல்கிய ஆலய அறங்காவலர், பிரதி மாநகரமேயர், மாநகரசபை அங்கத்தவர்கள், காவல்துறையினர், பாதுகாப்பு பிரிவினர், இலங்கை மின்சாரசபை ஊழியர்கள், வடபிராந்திய போக்குவரத்து சபையினர், தனியார் பேரூந்து சபையினர், தொண்டர் நிறுவனங்களான பரியோவான முதலுதவிப்படை, சாரணர் இயக்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம், மக்கள் நலன்புரிச்சங்கம் ஆகியோருக்கும் வர்த்தக பெருமக்கள், காலநேரம் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மாநகரசபை சுத்திகரிப்பு பணியாளர்கள், நீர் வேலைப் பகுதியினர், சுகாதார பகுதியினர் மற்றும் சகலருக்கும் எமது சார்பிலும் யாழ் நகர மக்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.