சர்வதேச லயன்ஸ் கழகம் 301 ‘பி’ யின் அனுசரனையுடன் யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் நடத்தும் கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடரின் இறுதியாட்டம் இன்று மின் ஒளியில் யாழ். மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தின் ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சென்றலைக்ஸ் விளையாடடு கழக அணி மோதவுள்ளது. பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் பமிலியன்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பட்டபிளை விளையாடடு கழக அணி மோதவுள்ளது.
இந் நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக லயன்ஸ் கழகத்தின் 306 ‘பி’ 1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிரியந்த பெர்னாண்டோ கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.