Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை » யாழ். போதனா வைத்தியசாலை வரும் நோயாளர்கள் தங்கநகைகள் அணிவதை தவிர்க்க

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்கள் போலியான நபர்களினால் ஏமாற்றப்படுவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இதனால் வைத்தியசாலைக்கு வரும் வெளிநோயாளர்கள் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு வரவேண்டாமெனவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் வயோதிபர்களை தனியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க வேண்டாமெனவும் அப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com