Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ். புத்தூர் சந்தியில் கோர விபத்து: இளைஞன் பலி(படங்கள்)

accidentபுத்தூர் சந்தியில் நேற்று பிற்பகல்(26-11-2013) 1.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் வளைவில் பயணித்த உந்துருளிகள் இரண்டு தமது வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகின இவற்றில் பயணித்த நால்வரும்
படுகாயத்துக்குள்ளாகினர் இவர்களை மீட்கும் பணியில் அவ்வழியால் பயணித்த கோப்பாய் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் வே நாகநாதன் தனது சொந்த வாகனத்தில் ஏற்றிச்சென்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்து உடனடி சிகிச்சைகளை மேற்கொண்டார்.

வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த ப. பத்மசீலன் (வயது-26) , யோ. பிறேம் (வயது-26) , அச்சுவேலியைச் சேர்ந்த செ. ஜெயக்குமார் ( வயது-32) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com