எமது வரலாறு சார் தொன்மையினை அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்றதொரு கண்காட்சி 1974 ஆம் ஆண்டில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் நடைபெற்றதாகத் தெரிய வருகின்றது. அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இத்தகைய கண்காட்சிகள் நடைபெறவில்லை.
தற்போது இக்கண்காட்சியைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் கலைக்கேசரி சஞ்சிகை வெளியீட்டாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நாளை ஆரம்பாகும் இக்கண்காட்சி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும்.