யாழ். பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் கைலாச பதி கலையரங்கில் வெகு சிறப் பாக நடைபெற்றது. இன் றைய நாளில் ஆயிரத்து 210 பேர் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக் கப்பட்டனர்.
யாழ். பல்கலைக்கழக துணை
வேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் தலைமை யில் நடை பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழகங்களின் வேந்தர் எம். சிவசூரிய கலந்து சிறப்பித்தார்.
நான்கு அமர்வுகளாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதல் அமர்வு காலை 9 மணியளவிலும், இரண்டாம் அமர்வு முற்பகல் 11 மணியளவிலும், மூன்றாம் அமர்வு பிற்பகல் 1.45 மணியளவிலும், நான்காம் அமர்வு பிற்பகல் 3.30 மணியளவிலும் நடைபெற்றன.
இம்முறை 3 பேருக்கு கௌரவ கலாநிதிப் பட்டமும் யாழ். பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியர்களாக கடமையாற்றிய நால்வருக்கு இலக்கிய காலாநிதிப்புட்டங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
You Are Here: Home » ஏனயவை, கல்வி, நிகழ்வுகள், யாழ்.செய்திகள் » யாழ். பல்கலைக் கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா(படங்கள் இணைப்பு)