யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இதேஇடத்தில் பொறியியல் பீடத்தையும் தற்காலிகமாக இயங்கவைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயக்க, பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரி பத்திரம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விவசாயபீடத்தை இயக்குவதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ள அறிவியல்நகர் பகுதி 168 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.