Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.நகர் சம்பத் வங்கியில் நள்ளிரவில் புகுந்த நபர்;மடக்கினர் பொலிஸார்

யாழ்.நகரிலுள்ள சம்பத் வங்கி அலுவலகத்தினுள் நேற்று முன்தினம் வியாழன் இரவு 11 மணிளவில் திடீரென உட்புகுந்தார் ஒருவர். இதனைக் கவனித்து விட்டார் அங்கு காவல் கடமையில் நின்றவர்.

உடனடியாக அவர் இலத்திரனியல் சமிக்ஞை (அலாரம்) உபகரணம் மூலம் தகவல் கொடுத்தார் யாழ். பொலிஸாருக்கு. விரைந்து வந்தனர் பொலிஸார். சந்தேக நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.தற்போது சந்தேகநபர் பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று கூறினார் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேரா.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com