யாழ். பஸ் நிலையத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.சுமார் 40 முதல் 45 வயதுக்கு இடைப் பட்ட ஆணின் சடலம் என பொலி ஸார் தெரிவித்துள்ளனர். எனினும் மேற்படி சடலம் அடை யாளம் காணப்படவில்லை. பயணி கள் தரிப்பிடத்துக்குள் இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர் நேற்று முன் தினம் இரவு மரணமாய் இருக்க லாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணை களைமேற்கொள்ள யாழ்.நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனிடையே நேற்று முன்தினம் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் காகி உயிரிழந்த இளைஞனின் தந்தை யார் உயிரிழந்த மகனின் சடலத்தை அடையாளம் காட்டியிருந்தார். இதையடுத்து சாவகச்சேரி நீதவா னின் உத்தரவின் பிரகாரம் நேற்று நண் பகல் சடலம் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வன்னி யுத்தத்தில் சிக்குண்டு இருந் ததாக தெரிவிக்கப்படுகின்ற இளைஞன் தற்போது உளவளத்துறை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.சாவகச்சேரி வைத்தியசாலையில் வாரம் தோறும் இவர் அதற்காக மருந்து களைப்பெற்று வந்ததாகவும் கூறப்படு கின்றது. தனக்கான தொழில் இல்லை என அவர் விரக்தி உற்றுக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.