Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை » யாழ்.நகரப் போக்குவரத்தில் புதிய விதிமுறைகள் அறிவிப்பு

யாழ்.நகரின் போக்குவரத்துடன் தொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வுகாணும் முகமாக யாழ்.மாநகர சபை முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் கடந்த 08.05.2011 ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவையாவன கீழ்வருமாறு,

01. – இடங்களிலிருந்து யாழ்.நகரை நோக்கி வரும் பஸ். 16.05.2011ஆம் திகதிலிருந்து தூர இடங்களில் இருந்து யாழ்.நகரத்துக்கு வரும் பேருந்துகள் பண்ணை தனியார் பஸ் நிலை யத்தில் தரித்து நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். இ.போ.ச. வாகனங்களும் இதிலடங்கும்.

02. கஸ்தூரியார் வீதி குகஸ்தூரியார் வீதிக்கும் ஆஸ்பத்திரி வீதிக்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட பகு தியை ஒருவழிப்பாதையாக பயன்படுத்து வதெனவும் பாதையின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதெனவும், தேவை ஏற்படின் பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள் வது. குகஸ்தூரியார் வீதியில் பொருட்களை இறக்கும் செயற்பாடுகளை பகல் 11.00மணி தொடக்கம் 2.00மணி வரையும் பிற்பகல் 6.00 மணிக்கு பின்னரும் மேற்கொள்ள லாம்.

03. ஆஸ்பத்திரி வீதி குஆஸ்பத்திரி வீதியைப் பொறுத்தவரை அதனைத் தற்போது இருவழிப்பாதையாகப் பயன்படுத்துவது. ஏற்கனவே ஒழுங்குபடுத் தப்பட்டபடி வீதியின் மையப்பகுதியில் அமை வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முச்சக்கர வண்டிகள் மோட்டார், சைக்கிள்கள், மோட்டார் கார்கள் முதலிய சிறியரக வாகனங்களை நிறுத்து வதை அங்கீகரிப்பது. வானத்தரிப்பு விபரம் விளம்பரப்பலகை மூலம் அறிவிக்கப்படும். அப்பலகைகள் மீது விளம்பரம் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆஸ்பத்திரி வீதியில் பொருட்களை இறக் கும் செயற்பாடு தினமும் மாலை 6.00 மணிக்கு பின் மேற்கொள்வதை அங்கீகரிப்பதெனவும், பகல் நேரத்தில் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் கந்தப்பசேகரம் வீதி வழியாக பொருட்களை ஏற்றியிறக்க அனுமதிப்பதெனவும் தீர்மானிக் கப்பட்டது. குமேற்படி வீதியில் மூன்று பாதசாரிக் கட வைகள் இனம் காணப்பட்டு அடையாளமிடப் பட்டவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. குஎக்காரணம் கொண்டும் ஆஸ்பத்திரி வீதியில் சுற்றுலாப் பயணப் பேருந்துகள் தரித்து நிற்பதை தடைசெய்வதெனவும் தீர்மா னிக்கப்பட்டது.

04. காங்கேசன்துறை வீதி கே.கே.எஸ் வீதி சுற்றுவட்ட வீதிக்கும் சி.பொன்னம்பலம் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் உட் பட அனைத்து வாகனங்களும் ஒற்றை நாள், இரட்டை நாள் என்ற அடிப்படையில் நிறுத்தப் படுவதைக் கண்டிப்பாக அமுல் செய்வதென வும் தீர்மானிக்கப்பட்டது. கு சி.பொன்னம்பலம் வீதிக்கும் ஸ்ரான்லி வீதிக் கும் இடைப்பட்ட வீதி ஒரு வழிப் பாதையாக வும் வாகன நிறுத்தத்திற்கு தடைசெய்யப்பட்ட இடமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு அவ்விதி யைக் கண்டிப்பாக அமுல்படுத்துவதென வும் தீர்மானிக்கப்பட்டது. குகே.கே.எஸ். வீதியில் பொருட்களை ஏற் றியிறக்கலை பி.ப.6.00 மணிக்குப் பின் னரே அனுமதிப்பதெனவும் தீர்மானிக்கப் பட்டது. இந்த நடைமுறை மேற்படி வீதியை அமுல் படுத்தும் காலம் வரை அமுலில் இருக்கும். வீதி அகலப்படுத்தப்பட்டபின் இவ்வீதிப் பாவனை மறுபரிசீலனை செய்யப்படும்.

05. ஸ்ரான்லி வீதி இருவழிப் போக்குவரத்துப் பாதை குமோட்டார் சைக்கிள், சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்களும் ஒற்றை, இரட்டை நாள் தரிப்பு முறையைப் பின்பற்றி நிறுத்தப் படுவது அனுமதிக்கப்படும்.பொருட்களை ஏற்றி இறக்கும் செயற் பாடு தினமும் பி.ப 6.00மணிக்குப் பின்னரே இடம்பெற அனுமதிக்கப்படும். குஸ்ரான்லி வீதியில் மக்கள் வங்கிக்கு முன்பாகவும் நாக விகாரைக்கு அருகாமையி லும் பாதசாரிக் கடவைக் குறியீடுகள் பொறிக் கப்படவேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

06. மின்சார நிலைய வீதி குஇருவழிப் போக்குவரத்துப் பாதை குசி.பொன்னம்பலம் வீதியில் இருந்து ஸ்ரான்லி வீதி வரையான பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் சகல வாகனங்களும் ஒற்றை, இரட்டை நாள் தரிப்பு முறையின்படி தரித்து நிற்க அனுமதிக்கப்படும்.

மினிபஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கு வதற்காக அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத் தில் 15 நிமிடங்களுக்கு மேற்படாமல் தரித்து நின்று ஏற்றி இறக்கலை அனுமதிக்கலாமெனத் தீர்மானிக்கப்பட்டது. குபொருட்களை ஏற்றி இறக்கும் செயற் பாடு பி.ப 6.00 மணிக்குப் பின்னர் நடை முறைப்படுத்தப்படும். ஸ்ரான்லி வீதியையும் மின்சார நிலைய வீதியையும் இணைக்கும் வீதியில் கனரக வாகனப் பாவனை தடைசெய்யப்பட வேண் டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.சிறியரக வாகனங்கள் இவ்வீதியை இருவழிப்பாதை யாகப் பயன்படுத்த முடியுமென்றும் தீர்மானிக் கப்பட்டது.

07. மினிபஸ் செயற்பாடுகள் பற்றிய நடை முறைகள் குயாழ்.நகரத்திற்குள் பருத்தித்துறை வீதி வழியாகப் பிரவேசிக்கும் மினிபஸ்கள் விக் டோறியா வீதி வழியாக மின்சார நிலைய வீதி யை அடையும். குதனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து பருத்தித் துறையை நோக்கிச் செல்லும் மினிபஸ்கள் மின்சார நிலைய வீதியூடாக சென்று ஸ்ரான்லி வீதி வெலிங்டன் தியேட்டர் சந்தியை அடைந்து ஆரியகுளம் வழியாக பருத்தித்துறை நோக்கி செல்லும். குபருத்தித்துறையிலிருந்து யாழ். நகரத்தி னுள் வரும் இ.போ.ச. பஸ்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக நகரத்தை அடையும். நகரத்திலி ருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் போது மினிபஸ் பாதையையே பயன்டுத்த வேண்டும். மானிப்பாய், காரைநகர், வட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் இ.போ.ச. பேருந்துகள் ஏற்கனவே பாவித்த வழித்தடத் தையே பின்பற்றலாம் எனத் தீர்மானிக்கப் பட்டது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com