யாழ்ப்பாணம் கோப்பாய் இராச வீதியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் பலியானார். ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
விபத்தில் உயிரிழந்தவர் அனலைத்தீவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட 25 வயதான குமரேசு நிர்மலன் ஆவார்.
மரணமானவரும மற்றும் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது முச்சக்கர வண்டி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதன் போது நிர்மலன் அதே இடத்தில் பலியானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.