யாழ்ப்பாணம் கொக்குவில் இரு பெண்கள் தனியாக உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த ஞாயிறு நள்ளிரவு 12.30 மணியளவில் அடை மழை பெய்து கொண்டிருந்தவேளை ஆயுதங்களுடன் புகுந்த ஐந்து பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று அப்பெண்கள் அணிந்திருந்த 15 பவுண் தங்க நகைகளையும், அவ்வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.
இவ்வீட்டில் யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரான எம்.மதிவதனி (வயது 41) என்பவர் 85 வயதுடைய தாயாருடன் வசிக்கின்றார். ஆசியரின் கணவர் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளார்