யாழ். குடா நாட்டில் புகைபிடிப்போரின் தொகை அண்மை காலங்களில் அதிகரித்துள்ளதாக யாழ். சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் இள வயதினர் அதிகளவில் புகைபிடிப்பவர்களாக இருப்பதாகவும். சிறு வயதில் புகை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பலர் யாழில் காணப்படுவதாக யாழ்.சுகாதார சேவைகள் பணிமனை மேற் கொண்ட ஆய்வுகள் தெரியவந்துள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடடப்பட்டுள்ளது.
புகைப்பிடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும பணிமனை தெரிவித்துள்ளது.