Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.காங்கேசன்துறை வீதி அகலிப்பு அடுத்த மாத இறுதியில் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம்  காங்கேசன்துறை வீதியை அகலிக்கும் பணிகள் அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.
குடாநாட்டில் உள்ள பிரதான வீதிகளை அகலமாக்கும் பணிகளைச் செய்து வரும் சீன அரசின் முன்னணி முகவர் நிறுவனத்தின் பொறியியலாளர் மைக்கல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்சமயம் யாழ்.  பருத்தித்துறை வீதியை அகலமாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அந்தப் பணியின் இறுதிக் கட்ட வேலைகள் மழை காரணமாக         இடைநிறுத்தப்பட்டுள்ளன. அது நிறைவு பெற்றதும் இரண்டாம் கட்டமாக யாழ். காங்கேசன்துறை வீதியை அகலமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
காங்கேசன்துறை வீதியை அகலமாக்குவதற்கான தொடக்கப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அகலிப்புப் பணியை அடுத்த மாத இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்  என்றார் அவர்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com