Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ். கல்வியியற் கல்லூரியின் 18 மாணவிகள் நேற்று திடீர் சுகவீனம்

திடீர் சுகவீனமுற்ற யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவிகள் 18 பேர் கோப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக் கப்பட்டுள்ளனர். இவ்வாறு கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் அதிபர் எஸ்.கே. யோகநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தேசியக் கல்வியியற் கல்லூரியில் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) மாலை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு குழுவிலுள்ள 18 மாணவிகள் மாங்காய் சாப்பிட்டுள்ளனர்.

இவர்களுக்கே இன்று (நேற்று) காலை வயிற்றோட்டம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் அனைவரையும் கோப்பாய் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்.

அவர்களில் 8 பேரின் உடல் நிலை பலவீனமாக இருந்ததால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகின்றது.

ஏனைய மாணவிகள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று திரும்பியுள்ளனர்.

அத்துடன் கல்வியியற் கல்லூரிக்கு இன்று (நேற்று) விஜயம் செய்த கோப்பாய் பொதுச் சுகாதார பரிசோதகர் வழங்கப்பட்ட உணவினால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com