Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் இலக்கிய குவியம் அமைப்பு அங்குரார்ப்பணம்

யாழ் நகர்மைய றோட்டறக்ட் கழகத்தின் அனுசரணையுடன் யாழ் இலக்கியத்துறையை வளர்க்கும் நோக்குடன் யாழ் மண்ணில் வளர்ந்து வரும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் முகமாக யாழ் இலக்கிய குவியம் என்கிற இலக்கிய  அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு  30-07-2011 அன்று  உதயன் விருந்தினர் விடுதியில் கவிஞ்ஞர் வேலணையூர் தாஸ் தலைமையில் இடம் பெற்றது.

கவிஞர்-நல்லைஅமிழ்தன், கவிஞர் தீபச்செல்வன், கவிஞர்-நெடுந்தீவு முகிலன், DR.ராஜ்மோகன், கவிஞர்-கிராமத்துக்குயில் ஓவியா, நல்லூர் நித்தியா, ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

இதில் பின்வரும் நிர்வாக அமைப்பு. தெரிவு செய்யப்ட்டது.
தலைவர்- வேலணையூர் தாஸ்
செயலாளர்- நித்தியா யோகராஜா
பொருளாளர்- சைலஜன்
கல்விசார் இலக்கிய இணைப்பாளர்- ஞானகாந்தன்
ஊடக இணைப்பாளர்- நெடுந்தீவு முகிலன்
இலக்கிய உபகுழுக்களின் தலைவர்கள்-
அரியாலை- குமாரதாஸ்
தீவகம்-ஜெயபாலன்
பருத்தித்துறை- துவாரகன்
கொழும்புத்துறை- கோபிகிருஸ்ணா.
ஆலோசகர் –முகுந்தன் -மணிவண்ணன்.
-நல்லை அமிழ்தன்

இதன் நோக்கங்களாக
வளர்ந்து வரும் கலைஞ்ர்களுக் கான கள வாய்ப்புகளை இனங்கண்டு வழிப்டுத்தல் இலக்கிய கருத்தரங்குகள் ஊடாக இலக்கிய ஆர்வத்தை ஏற்ப்படுத்தல் பிரதேசங்கள்தோறும் இலக்கிய குழுக்களை அமைத்தல்

மாணவர்களிடையே இலக்கிய போட்டிகள் நடாத்துதல் போன்றன ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com