க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பேறுபேறுகள் நேற்று வெளியாகின. இதில் யாழ். மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி என்பன முன்னணி பெறுபேறுகளை பெற்றன.
இதில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் தேசியமட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார். மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கு.நிருஜன் பெற்றுக்கொண்டார்.
கணித பிரிவில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சுமங்கலி சிவகுமாரன், ஹாட்லிக் கல்லூரி மாணவன் தெய்வேந்திரன் பிரணவன், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் சின்னக்கோன் சிந்துஜன் ஆகியோர் 3 ஏ பெற்று மாவட்ட மட்டத்தில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருசோத்தம குருக்கள் ராஜாராம் 3 ஏ சித்திபெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தையும் மூன்றாம் இடத்தை வேம்படி மகளிர் கல்லூரி மாணவி லக்ஸ்ரெலா மரியதாஸும் பெற்றுக்கொண்டனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து. 3 ஏ-12, வேம்படி மகளிர் கல்லூரி 3 ஏ-11, ஹாட்லிக் கல்லூரி 3 ஏ-8, சாவகச்சேரி இந்து 3 ஏ-5, கொக்குவில் இந்து 3 ஏ-4 பெற்றுள்ளனர்.