Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்ப்பாணத்தில் வடமாகாண கலாசார விழா ஜனவரியில்

வடக்கு மாகாண கலாசார விழாவை எதிர் வரும் ஜனவரி மாத இறுதியில் யாழ்ப்பா ணத்தில் நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண கலாசார விழா நடத்துவதற்கான கலந்துரை யாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநருக் கும், வடக்கு மாகாண கலாசாரத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் நடைபெற்றது.இதில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்ட லுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் வடக்கு மாகாண கலாசாரத் திணைக் கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன் போது 2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணக் கலாசார விழாவை எதிர் வரும் ஜனவரி மாத இறுதியில் யாழ்ப்பாணத் தில் நடத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அறிவுறுத்தினார்.இவ் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுக ளையும் மேற்கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com