Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தேசிய மாநாடு

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தேசிய மாநாடும், பிரதிநிதிகள் சபைக் கூட்டமும் அடுத்தமாதம் 4 ஆம் திகதி யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.ரி. சகாதேவராசா தலைமையில் 4 ஆம் திகதி காலை 9 மணிமுதல் தேசிய மாநாடும் பி.ப.2.30மணிமுதல் 6 மணிவரை பிரதிநிதிகள் சபைக் கூட்டமும் நடைபெறும்.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சகல அங்கத்தவர்களையும், சகல கிளைகளினதும் நிர்வாகசபை உறுப்பினர்களையும் இதில் கலந்துகொள்ளுமாறு பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் அறிவித்துள்ளார்.புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான விவரங்கள், தேர்தல் விதிகள், மாதிரி வேட்பு மனு விண்ணப்பங்களை சகல கிளைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com