மின்கம்பங்களின் ஊடாக வழங்கப்படும் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை அகற்றுவதற்கு இலங்கை மின்சார சபையின் யாழ். மாவட்ட அலுவலகம் கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு காலக்கெடு விதித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பங்களையே கேபிள் தொலைக்காட்சி உரிமையாளர்கள் பயன்படுத்தி பொது மக்களின் வீடுகளுக்கு இணைப்புக்களை வழங்கியுள்ளனர்.
மின்விநியோக பாதைகளுக்கான பராமரிப்பு வேலைகள் நடைபெறவுள்ளதால் இரண்டு கிழமைகளுக்குள் இவற்றை அகற்ற வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.