Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில் 170 பேர் காசநோயினால் பாதிப்பு

crossயாழ். மாவட்டத்தில் 170 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 10 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் யாழ். மாவட்ட காசநோய் வைத்திய நிபுணர் எஸ். யமுனானந்தா தெரிவித்தார்.

2013 ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான இக்காலப்பகுதியில் சளி பரிசோதனையின் மூலம் 170 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் 10 சிறுவர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக சாதாரண இருமல் சளியுடன் காணப்பட்டால், வைத்தியசாலைகளில் சளி பரிசோதனை மேற்கொண்டு, காசநோயினை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ சிகிச்சையினை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, வேலைத்தளங்கள் மற்றும் போக்குவரத்து நேரங்களில், புகையினை தவிர்த்துக் கொள்ளுமாறும், காற்றோட்டம் மிக்க சுவாசத்திற்கு ஏற்றவாறு வேலைத்தளங்கள் மற்றும் வீடுகளை அமைத்துக் கொள்ளுமாறும் வைத்திய நிபுணர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

-தமிழ் மிரர்

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com