யாழ். மாவட்டத்தில் பாலியல் தொடர்பான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் என்றும் இல்லாதவாறு பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தாம் செய்த தவறை மறைப்பதற்காகவே இவ்வாறான கொலைகள் அவசர அவரசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு தமக்கு தேவை என்றார்.