காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தண்ட பணமாக 246,000 ரூபா நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது என பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 26 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இவர்களில் , 12 வர்த்தகர்கள் தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 120,000 ரூபா தண்ட பணம் யாழ். நீதிமன்றத்தினாலும்;, 14 வர்;த்தகர்கள் தலா 9,000 ரூபா வீதம் 126,000 ரூபா தண்ட பணம் பருத்தித்துறை நீதிமன்றத்தினாலும் அறவிடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.