Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில் நகைக்கடைகளில் விசித்திரமான திருட்டு

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடைகளில் பட்டப் பகலில் நேரடியாக திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு நேற்றுத் திருடிய ஒருவர் வசமாக மாட்டிக்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றில் நகைகள் வாங்குவதற் கென இருவர் சென்று அங்கு சங்கி லிகளைப் பார்வையிட்டுக் கொண்டி ருந்தபோதுஅவர்களில் ஒருவர் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.இதனையடுத்து மற்றைய நபரை பிடித்த கடை ஊழியர்கள் அவரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

தனக்கும் தப்பி ஓடியவருக்கு மிடையில் எந்தவித தொடர்பும் இல் லை என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்கள் அண் மைக்காலமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com