திருமறைக் கலா மன்றத்தின் சிறுவர், இளைஞர்களுக்கான கலைத்தூது கலைப்பூங்காவிற்கான புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முன்தினம் சனிக்கிழமைஇடம்பெற்றது.
இக்கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டும் வைபவத்தில் முன்னாள் கொழும்பு பேராயர் ஒஸ் வோல்ட் கோமிஸ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார்.
இந்த நிகழ்வில், திருமறைக் கலாமன்றத்தின் செயலாளர் ஸே.ஜோன்சன் ஓவியர், ஆசை இராசையா மற்றும் ஓவியர் ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.