மூதறிஞர் தந்தை செல்வாவின் 114ஆவது ஜனனதின வைபவம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது நினைவுச் சதுக்கத்தில் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்ரிக்கப்பட்டது.
அரசியல் பிரமுகர்களினால் தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர் மலை அனுவிக்கப்பட்டு அவரது கல்லறைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்த சங்கரி, த.சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், சொலமோன் சிறில் மற்றும் முன்னாள் அங்கிலிக்கன் ஆயர் ஜெபநேசன், யாழ். மாநகர சபை தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பனர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.