இன்று காலை 10 மணிக்கு யாழ் பண்ணையில் அமைந்துள்ள சிறிலங்கா ரெலிகொம் காரியாலயம் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தபால்த் தொலைத் தொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா ஆகியோர் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட இக் கட்டடத்தை திறந்து வைத்தனர்.
பண்ணையில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டாத கட்டடத்திலேயே கடந்த பல வருடங்களாக இக் காரியாலயம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
ரெலிக்கொம் உயர் அதிகாரிகள், மற்றும் யாழ் அரசாங்க அதிபர்,யாழ் மாநகர மேயர் பல உயரதிகாரிகளும் இவ் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.