Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 15 வயது சிறுமி மீது வல்லுறவு

15 வயது பாடசாலைச் சிறுமி ஒருவருக்கு குளிர்ப்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை, யாழ். கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பாடசாலைச் சிறுமியைச் சந்தித்துள்ள சந்தேகநபர், அவருக்கு குளிர்பானம் அருந்தக் கொடுத்ததாகவும் அச்சிறுமி மயக்கமடைந்ததும் பாலடைந்த வீடு ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாகவும் சந்தேகநபருக்கு எதிராக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இணுவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் அதிரடி நடவடிக்கையின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், கோப்பாய் பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராசா உத்தரவிட்டார்.

தற்போதைய காலத்தில் எமக்கு அறிமுகமில்லாதவர்களிடப் இவ்வாறான உணவு, மற்றும் குடிவகைகளை பெற்று அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com