யாழ். அரியாலைப் பகுதியிலுள்ள மகாத்மாகாந்தி சனசமூக நிலையத்திற்கு முன்பாகவுள்ள மகாத்மாகாந்தி சிலை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கைதான இரு சந்தேக நபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.
இச்சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே யாழ். நீதிமன்ற நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இக்காந்தி சிலை சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ். பொலிஸார் கைதுசெய்தனர்.