Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவன் வீடு திரும்பினார்

யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை காணாமல் போனதாகக் கூறப்ட்ட மாணவன் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.

காணாமல் போன அன்று புதன்கிழமை இவரை வழிமறித்த சிலர் பெயர் மற்றும் முகவரிகளை விசாரித்தனர் எனவும் அதன் பின்னர் நேற்றுக் காலை திருகோணமலையில் வைத்தே தனக்கு நினைவு திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திருகோணமலையிலிருந்து பேரூந்து மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள தனது வீட்டிற்கு நேற்று நள்ளிரவு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ். போதனா மருத்துவமனையின் 24ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழ். அத்தியடியைச் சேர்ந்த, சென் ஜோன்ஸ் கல்லூரியின் உயர்தர மாணவனான பாக்கியராஜா தனுஜன் (வயது 18) என்ற மாணவனே காணாமல் போனதாக காவற்றுறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com