Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழில் காணாமல்போன மோட்டார் சைக்கிள் கடுகஸ்தோட்டையில்

யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிளொன்று கடுகஸ்தோட்டை பகுதி திருட்டுக் கும்பலொன்றிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடைய பல்ஷர் ரக மோட்டர் சைக்கிள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் வைத்து திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் இந்த மோட்டார் சைக்கிள் கடுகஸ்தோட்டை பகுதியில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்றறைய தினம் இந்த மோட்டார் சைக்கிளை வைத்திருந்த நபரும் அவருக்கு விற்பனை செய்த நபரும் கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது மோட்டார் சைக்கிளை வாங்கியவரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள்பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மற்றைய நபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்கு மூலத்தை பதிவு செய்யுமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களே உங்கள் வண்டிகளை நிறுத்திவைக்கும்போது அவதானமாக இருக்கவும், மோட்டார்சைக்கிள்தானே என அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com