யாழில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக ஒருதொகுதி வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திற்கான இந்திய வீட்டுத்திட்ட பொறுப்பதிகாரி கே.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட இந்திய வீட்டுத்திட்ட பணிகள் அரியாலை கிழக்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். பிரதேச செயலகங்கள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வருட இறுதியில் இரண்டாம் கட்ட வீட்டுத்திட்டங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
முதல் கட்ட இந்திய வீட்டத்திட்டங்கள் அரியாலை, பூம்புகார் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தன.